மக்களை அழிப்பவர் தேஜஸ்வி: பிரசாந்த் கிஷோர் தாக்கு

நாளந்தா: மக்களுக்கு பேனாவை கொடுத்து, அவர்களை அழிக்க நினைப்பவர் ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி, சமீபத்தில் 10 ஆயிரம் பேனாக்கள் விநியோகிக்க உள்ளதாக ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி அறிவித்தார்.

நாளந்தாவில் இது குறித்து ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

தேஜஸ்வி, பேனாக்களை விநியோகிப்பது, சிங்கம் காட்டில் பால் விநியோகிப்பது போன்றது. சிங்கம் பால் வழங்குவதன் மூலம் உங்களைத் தின்றுவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல், மக்களுக்கு தேஜஸ்வி, பேனா தந்துவிட்டு பின்னர் உங்களை அழிக்கப் போகிறார். அவர் உண்மையில் ஒரு துப்பாக்கியை உங்களிடம் தரப் போகிறார். அவர் 'பேனா மனிதர்' அல்ல, அவர் ஒரு 'துப்பாக்கி மனிதர்',

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Advertisement