'ஆப்பிள்' மீது காதல்

வித விதமாக, வித்தியாசமாக, மொபைல் போன்களை பயன்படுத்துவோர் ஏராளம். ஆனால் 'ஆப்பிள் ஐ போன்களை' மாடலுக்கு, மாடல் புதியதாக வாங்கி 'அப்டேட்' செய்து வருகிறார், கோவையிலுள்ள பிரபல தொழில் அதிபரும், சாலிட்ஸ் அண்ட் மாடல்ஸ் இன்ஜினியரிங் நிறுவன இணை நிறுவனருமான சவுந்தர்ராஜன்.

ஆப்பிள் ஐ போன்களில் 4, 6, 8, 10, 12, 14, வரிசையில், தற்போது ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ்வைத்திருக்கிறார்.

''ஆப்பிள் மொபைல் போன்களில், ஒவ்வொரு அறிமுகத்தின் போதும் ஒரு புதிய தொழில் நுட்பம் நுழைந்திருக்கும். அந்த தொழில் நுட்பம் ரொம்ப பிடிக்கும். அது பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த பயனளிக்கிறது. யாரும் எளிதில் 'ஹேக்' செய்ய முடியாது. நமது டேட்டாவையும் எடுக்க முடியாது. ஆண்ட்ராய்டு மொபைலில், எந்த சாப்ட்வேரையும் நுழைக்கலாம். ஆப்பிளில் முடியாது,''

''எப்போதிருந்து பயன்படுத்துகிறீர்கள்?''



2014ல் ஆப்பிள் 4 எஸ் ஐ., பயன்படுத்த துவங்கினேன் தற்போது 16 ஐ பயன்படுத்தி வருகிறேன். ஆப்பிள் பிராண்டில் ஐபேட், ஏர்பாட், ஹோம்பாட், லேப்டாப், அல்ட்ரா வாட்ச், மவுஸ், ஏர் பாட்ஸ், ஹெட்போன், மேக்புக், மேஜிக்ட்ராக் பயன்படுத்துகிறேன். ஏனென்றால், இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தகவல்களை எளிதாக பரிமாறலாம்.

ஒன்றில் கட் அண்டு காப்பி செய்து, மற்றொன்றில் பேஸ்ட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.ஆப்பிள் டிவைஸ்களில், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எளிதாக நெட்ஒர்க் செய்து கொள்ளலாம்.

Advertisement