கார்கள் மோதல் 2 பேர் படுகாயம்
சின்னசேலம்: சின்னசேலம் அருகே இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம், சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 39; இவர் நேற்று காலை 7:00 மணிக்கு காரில் சேலம் நோக்கி சென்றார். அப்போது சேலம், முத்துவலசூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்,32; என்பவர் குடும்பத்தாருடன் காரில் சேலத்திற்கு சென்றார்.
சின்னசேலம் அடுத்த பங்காரம் அருகே சென்ற போது, ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற கார், முன்னால் சென்ற மணிகண்டன் கார் மீது மோதியது.
இதில் இரு கார்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் ரஞ்சித்குமார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement