போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் : சிதம்பரத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த போதை விழிப்புணர்வு பேரணியை சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.

சிதம்பரம், வடக்கு வீதி தலைமை தபால் நிலையத்தில் இருந்து துவங்கிய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு கோட்டக் கலால் அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் கீதா முன்னிலை வகித்தார்.

சப் கலெக்டர் கிஷன்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லுாரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் குகானந்தம், ஜெயமாலினி, ஷேக் சிராஜ்தீன் உடனிருந்தனர்.

Advertisement