போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் : சிதம்பரத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த போதை விழிப்புணர்வு பேரணியை சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.
சிதம்பரம், வடக்கு வீதி தலைமை தபால் நிலையத்தில் இருந்து துவங்கிய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு கோட்டக் கலால் அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் கீதா முன்னிலை வகித்தார்.
சப் கலெக்டர் கிஷன்குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லுாரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் குகானந்தம், ஜெயமாலினி, ஷேக் சிராஜ்தீன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
-
இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை
-
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
-
ஏழாவது முறையாக ஆட்சி உகாண்டா அதிபர் விருப்பம்
-
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு ஏமனின் ஹவுதிக்கு எச்சரிக்கை
-
வங்கதேசம் துர்கா கோவில் இடிப்பு ஹிந்துக்கள் போராட்டம்
Advertisement
Advertisement