பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி பலி
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி மகன் சூரிய பிரகாஷ், 17; மூளை வளர்ச்சி சற்று குன்றியவர். அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் ஏரியில் சடலமாக மிதப்பதாக மதியம் குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது. திருநாவலுார் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!
-
பிரியங்கா- வருண் சந்திப்பு: ராகுலுக்கு கசப்பு
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
-
தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
-
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
-
ஆய்வு செய்யாமலே ஸ்டிக்கர் ஒட்டும் அதிகாரிகள்
Advertisement
Advertisement