நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!

சேலம்: மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. மொத்த நீர்த்தேக்க உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது.
கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு, 73,452 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 80,984 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 26,000 கனஅடி நீர் அணை மின் நிலையங்கள், 8 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன் 29) காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 68,007 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.22 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியை எட்டியது.
மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில், வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும். அதனால் காவிரி வழித்தட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்
-
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை குற்றச்சாட்டு
-
2030ல் கோவையின் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும்; ஐ.டி.எப்., அளிக்கிறது நம்பிக்கை
-
ராஜஸ்தானில் சோகம்; மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர் 4 பேர் பலி; 5 பேர் மாயம்
-
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
-
இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை
-
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்