ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
மதுரை: வாரம் இருமுறை மதுரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 'மஹால்' ரயில்களில் (22623/22624) கூடுதல் பெட்டிகள் தற்காலிமாக இணைக்கப்பட்டன. அதனை இந்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்களில் 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி மார்ச் 22முதல் தற்காலிகமாக இணைத்து இயக்கப்படுகிறது. இவற்றின் காலம் முடிவடைந்த நிலையில் இப்பெட்டிகளின் இணைப்பு மதுரை - தாம்பரம் ரயிலில் (22624) டிச. 27 வரை, தாம்பரம் - மதுரை ரயிலில் (22623) டிச. 28 வரை தொடர்கிறது.இதன்மூலம் இந்த ரயில்கள் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் என 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
நவீன பெட்டிகள்
ஜூலை 7 முதல் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (16362), ஜூலை 8 முதல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி(16361) ஆகிய ரயில்கள் எல்.எச்.பி., எனும் அதிநவீன பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில்களை பாதுகாப்புடன் வேகமாக இயக்கவும், பெட்டிகளில் கூடுதல் பயணிகள் பயணிக்கவும் முடியும்.