அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

வாஷிங்டன்: திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, அமெரிக்கா சென்ற 24 வயது இளம்பெண் மாயமானது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, கடந்த 20ம் தேதி இந்தியாவில் இருந்து சிம்ரன், 24, என்ற இளம் பெண் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.கடந்த 25ம் தேதி அவர் மாயமாகி விட்டார். எங்கு சென்றார், யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கடைசியாக இருந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், அவர் செல்போனை பயன்படுத்தியபடி, யாருக்கோ காத்திருந்தது தெரிய வந்தது. மேலும், சிம்ரனுக்கு ஆங்கிலம் பேச தெரியாது என்றும், அமெரிக்காவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அவர் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் அமெரிக்கா வரவில்லை, வேறு காரணத்துக்காக வந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
மர்மமான முறையில் இளம் பெண் மாயமாகி இருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சிம்ரன் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
இதேபோல, அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி சுதிக்ஷா கோனான்கி என்பவர் டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது மாயமானது குறிப்பிடத்தக்கது.









மேலும்
-
அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது
-
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றி: ராணுவ அதிகாரி விளக்கம்
-
கருணாநிதியால் கூட முடியவில்லை; ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
-
டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது
-
வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயார்: அமெரிக்காவின் உதவியை நாடுகிறார் அதிபர் ஜெலென்ஸ்கி!
-
பஹல்காமில் மீண்டு வரும் சுற்றுலா: பாதுகாப்பு உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி