போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,

போபால்: '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசாரால் மட்டும் அதனை தடுக்க முடியாது,'' என ம.பி., மாநில போலீஸ் டி.ஜி.பி., கூறியுள்ளார்.
பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டி.ஜி.பி., கைலாஷ் மக்வானா கூறியதாவது: இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனது எண்ணப்படி, இணைய சேவை, மொபைல்போன் பயன்பாடு, ஆபாச படங்கள், மதுபானம் எளிதாக கிடைப்பதும் காரணம். எங்கிருந்தாலும் மொபைல்போன் மூலம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் காரணம். சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருகிறது. இவை அனைத்தும் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகிறது.
இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள், இளம் வயதில் இளைஞர்களின் மனதிற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் மற்றொரு காரணம் ஆகும். எனவே, சம்பவங்களை போலீசார் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது.
வீடுகளிலும், ஒருவர் பேச்சை மற்றவர் கேட்பது கிடையாது. குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள். அப்போது அவமானம் மற்றும் மரியாதை என்ற உணர்வு இருந்தது. ஆனால், அவை இப்போது மறைந்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது
-
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றி: ராணுவ அதிகாரி விளக்கம்
-
கருணாநிதியால் கூட முடியவில்லை; ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
-
டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது
-
வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயார்: அமெரிக்காவின் உதவியை நாடுகிறார் அதிபர் ஜெலென்ஸ்கி!
-
பஹல்காமில் மீண்டு வரும் சுற்றுலா: பாதுகாப்பு உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி