மேட்டூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலை 6:00 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, 58 அயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது.
கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. போதிய நீர் இருப்பு காரணமாக கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.2 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணை இன்று மாலை மாலை 6:00 மணிக்கு மேட்டூர் அணை நிரம்பியது.


@quote@கடந்த 67 ஆண்டுகளில் ஜூன் மாதம் மேட்டூர் அணை நிரம்புவது இதுவே முதல்முறையாகும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. quote
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (6)
bala krishnan - ,இந்தியா
29 ஜூன்,2025 - 22:03 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
29 ஜூன்,2025 - 20:56 Report Abuse

0
0
Reply
ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி - Chennai,இந்தியா
29 ஜூன்,2025 - 20:52 Report Abuse

0
0
Reply
S Sekar - ,இந்தியா
29 ஜூன்,2025 - 20:41 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
29 ஜூன்,2025 - 18:59 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
29 ஜூன்,2025 - 18:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நெல்லை அணி ஏமாற்றம்: 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது
-
முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்
-
வங்கதேசத்தில் ஹிந்துப் பெண் பலாத்காரம்: வீடியோ பதிவு செய்த கயவர்கள் கைது
-
விம்பிள்டன் டென்னிஸ்: சாதிப்பாரா அல்காரஸ்
-
வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
-
பெங்களூருவில் பயங்கரம்; மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம்
Advertisement
Advertisement