முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி

தொண்டாமுத்தூர்; பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் ஆதின திருமடத்தில், உலக சாதனைக்காக, கல்லூரி மாணவி, முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், தமிழ் இலக்கியவியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தேவதர்ஷினி, உலக சாதனைக்காக, தொடர் 'முருகவேள் பன்னிரு திருமுறை' பாராயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இம்முயற்சியின் துவக்க நிகழ்வில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மாணவி தேவதர்ஷினிக்கு, ஆசி வழங்கினார். தொடர்ந்து, உலக சாதனை முயற்சியை கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் பானுமதி துவக்கி வைத்தார்.
நேற்று காலை, 10:00 மணி முதல் முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணத்தை மாணவி தேவதர்ஷினி துவக்கினார். நாள்தோறும், 11 மணி நேரம் வீதம், முருகவேள் பன்னிரு திருமுறையில் உள்ள 5,414 பாடல்களை மாணவி பாட உள்ளார். தொடர்ந்து, 8 நாட்கள் பாராயணம் செய்து, உலக சாதனைக்கு முயற்சிப்பதாக, மாணவி தெரிவித்தார்.
மேலும்
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
-
ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்
-
குழந்தையின்மையா ஷிவானி கருத்தரிப்பு மையம்
-
ப ோலீ சை மிரட்டியவர் கைது
-
மதுபாட்டில் விற்றவர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து