பாடம் கற்கும் திறனை வளர்க்க கல்வித்துறை புது திட்டம்; 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்த அறிவுறுத்தல்

கோவை; கோவை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்டத்தில் 1,387 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

ஜூன் மாதத்தில், பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. 1,116 பள்ளிகளில் இருந்து, 2ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர்.

முடிவுகள் கூறுவதென்ன



மதிப்பீட்டு முடிவுகள் படி, தமிழ் மொழியில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்றாக வாசிப்பதும், ஆங்கிலத்தில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத்துக்களை, அடையாளம் கண்டு வாசிக்க முடிவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கணிதத்தில் குறிப்பாக, 2ம் வகுப்பில் 51 சதவீதம் பேர் கழித்தல் கணக்குகளிலும், 3ம் வகுப்பில் 45 சதவீதம் பேர், 4 மற்றும் 5ம் வகுப்புகளில் 60 சதவீதம் பேர் வகுத்தல் கணக்குகளிலும், பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்.

இதனையடுத்து, மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், தனித்தனி பயிற்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் நன்கு படிப்பவர்கள், ஓரளவுக்கு படிப்பவர்கள், மெல்ல கற்கும் மாணவர்கள் ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற பயிற்சி வழங்கப்படவுள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு



பயிற்சி திட்டத்தின்படி, பாடங்கள் முடிந்தவுடன், ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், தலைமையாசிரியர்கள் வாரத்தில் இருமுறை அவர்களது அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்பாடுகளை கண்காணிக்க, வட்டார கல்வி அலுவலர்கள், வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு வட்டாரங்களுக்கு ஒருவர் என, கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் தொடங்கி, பேரூர், சூலூர், தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட, 15 வட்டார வள மையங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி அளவிலும், மாதம் ஒருமுறை மாவட்ட அளவிலும் ஆய்வுகள் நடத்தப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீட்டு முடிவுகள் படி, தமிழ் மொழியில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்றாக வாசிப்பதும், ஆங்கிலத்தில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத்துக்களை, அடையாளம் கண்டு வாசிக்க முடிவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கணிதத்தில் குறிப்பாக, 2ம் வகுப்பில் 51 சதவீதம் பேர் கழித்தல் கணக்குகளிலும், 3ம் வகுப்பில் 45 சதவீதம் பேர், 4 மற்றும் 5ம் வகுப்புகளில் 60 சதவீதம் பேர் வகுத்தல் கணக்குகளிலும், பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்.

Advertisement