பெரும்பேர்கண்டிகை -- சீதாபுரம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம்:பெரும்பேர் கண்டிகை -- சீதாபுரம் சாலையில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகையிலிருந்து, சீதாபுரம் ஊராட்சிக்குச் செல்லும் சாலை உள்ளது.
இது பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்துார் உள்ளிட்ட கிராம மக்கள் சீதாபுரம், திருமுக்காடு, திம்மாபுரம் ஊராட்சிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவோர், தொழுப்பேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, பெரும்பேர் கண்டிகை வழியாக சீதாபுரம் கிராமத்திற்குச் சென்று வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாத கிராமம் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரங்களில், காட்டுப் பகுதி வழியாக பெரும்பேர் கண்டிகை -- சீதாபுரம் சாலையில் நடந்து செல்கின்றனர்.
அப்போது, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இதனால், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரும்பேர் கண்டிகை -- சீதாபுரம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
-
ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்
-
குழந்தையின்மையா ஷிவானி கருத்தரிப்பு மையம்
-
ப ோலீ சை மிரட்டியவர் கைது
-
மதுபாட்டில் விற்றவர் கைது