தொழிலாளி தற்கொலை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கம்பி கட்டும் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல், சின்னசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 46; கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அருகே உள்ள வயலில் இருந்த தேக்கு மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement