தண்ணீர் டிராக்டர் மோதி தொழிலாளி பலி
கடலுார் : கடலுார் அருகே பைக்கில் சென்றவர் மீது தண்ணீர் எடுத்தச்செல்லும் டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் கந்தவேல்,48; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு பைக்கில் தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். சிறிது துாரம் சென்ற போது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் தவறி விழுந்த கந்தவேல் மீது, டிராக்டரின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் தண்ணீர் டிராக்டர் உரிமையாளர் மற்றும் டிரைவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் விபத்தில் ஒருவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
-
ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்
-
குழந்தையின்மையா ஷிவானி கருத்தரிப்பு மையம்
-
ப ோலீ சை மிரட்டியவர் கைது
-
மதுபாட்டில் விற்றவர் கைது
Advertisement
Advertisement