வாள்களுடன் இருவர் கைது

பேரையூர் : பேரையூர் அருகே வி.சத்திரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் போலீஸ் எஸ்.ஐ., வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப்பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருவர் வாள்களுடன் இருந்ததைப் பார்த்து, பிடித்து, வாள்களைக் கைப்பற்றினர். விசாரணையில் இருவரும் பேரையூர் அருகே வி. வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்த ஜெயகுமார்24, ராம்குமார் 22 என்பதும் தெரியவந்தது. எதற்காக இருவரும் வாளுடன் வந்தனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement