ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஜெருசலம்: ஈரானுக்கு எதிரான போரில் அடைந்த வெற்றிக்குப் பிறகு, பிணைக்கைதிகளை மீட்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் இஸ்ரேலுக்கு உருவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் மோதல் இருந்து வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அதில் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என இரு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து மீண்டும் போர் துவங்கி நடந்து வருகிறது. தற்போது வரையில் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளை மொத்தமாக அழிக்கும் வரையில் போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். ஆனால், காசாவுடன் போர் ஒப்பந்தம் மேற்கொண்டு, பிணைக்கைதிகளை மீட்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும், 60 நாட்கள் போர் நிறுத்தம் செய்யவும், உயிருடன் இருக்கும் பிணைக்கைதிகள் மற்றும் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்களை வாங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் அடைந்த வெற்றிக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நேற்று இஸ்ரேலின் ஷின் பெட் பாதுகாப்பு முகமையை பார்வையிட்ட போது அவர் கூறியதாவது; ஈரானுக்கு எதிரான போரில் அடைந்த வெற்றிக்கு பிறகு, காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆப்ரகாம் ஒப்பந்தம் (அமைதி ஒப்பந்தம்) விரிவுபடுத்தவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. காசா பிரச்சினையையும் தீர்க்க வேண்டும். ஹமாஸை வீழ்த்த வேண்டும். இந்த இரு பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்போம், எனக் கூறினார்.
மேலும்
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
-
சிவகங்கை லாக் அப் மரணம்; முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு