இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு

புதுடில்லி: குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் அழைப்பை ஏற்று, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று 4 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வாஷிங்டனில் நாளை (ஜூலை 2) நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.
கூட்டத்தில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். உலகளாவிய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்தியாவில் நடைபெறவிருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டிற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் மற்றும் அதனை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்க உள்ளார். எல்லைத் தாண்டிய பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளவிலான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
தலைவர் காங்., மேலிடம் இல்லையென்றால் வேறு யார்: கார்கேவுக்கு பா.ஜ., கேள்வி
-
மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்
-
போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
-
மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்
-
2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை
-
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி