சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர்'' என டிரம்ப் பதில் அளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதா நேற்று செனட்டில் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு அனுமதிக்கும் நடைமுறை ஓட்டெடுப்பில் இரு ஓட்டுகளில் தேர்வானது.
இந்த மசோதாவுக்கு தான் தொழிலதிபர் எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எலான் மஸ்க் அமெரிக்க அதிபரின் நெருங்கிய ஆலோசகராக கடந்த மே மாதம் பணியாற்றினார். பின்னர் அவரது பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில், எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த 'பெரிய அழகான வரி' மசோதா செனட்டில் நிறைவேறியது குறித்து டிரம்ப் கூறியதாவது:
எலான் மஸ்க் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன். நான் அவருடன் அதிகம் பேசியதில்லை, ஆனால் அவர் எப்போதும் நன்றாகச் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு புத்திசாலி. அவர் உண்மையில் என்னுடன் பிரசாரம் செய்து, இதையும் அதையும் செய்தார். ஆனால் அவர் கொஞ்சம் வருத்தப்பட்டார், அது பொருத்தமானதல்ல. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிரம்புக்கும் அவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக அதிபர் மிரட்டலும் விடுத்தார்.பின்னர் மஸ்க் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (2)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஜூன்,2025 - 11:41 Report Abuse

0
0
Reply
N Srinivasan - Chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 11:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை
-
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
-
மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்
-
தி.மு.க., அரசுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு; எச்சரிக்கிறார் அன்புமணி
-
ஹிமாச்சலில் கொட்டியது கனமழை; 5 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்; 24 மணி நேரத்தில் 3 பேர் பலி!
-
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!
Advertisement
Advertisement