கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு

சென்னை: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, அறிவியல் வழியில், 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் முகத்தை, இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான்மூர்ஸ் பல்கலை வடிவமைத்துள்ளது. கீழடியில், தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தனர் என்பதற்கான அறிவியல் சான்றுகள், ஒன்றன் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது, மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு பிறகாவது, மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே, எட்டு கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement