ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு

ஆமதாபாத்: குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீப்பற்றியது. கப்பலின் இயந்திரங்கள் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய கடற்படை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய கடற்படை, புகைப்படங்களுடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மாலுமிகள் 14 உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன், குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து ஓமன் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலில், இயந்திர அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை வீரர்கள் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
-
ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை நடுவே மரங்கள்: வாகன ஓட்டிகள் திக்... திக்...
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை
-
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
-
மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்
-
தி.மு.க., அரசுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு; எச்சரிக்கிறார் அன்புமணி