சிறுமிகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கம்பம்: காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுமிகள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடத்தினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சிறுமிகள் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மைனர் பெண்கள் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமையேற்ற மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவஹர்லால் பேசுகையில், சிறுமிகள் திருமணத்தால் ஏற்படும் கர்ப்பம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தச் சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குறைப்பிரசவம், இடுப்பு எலும்பு வளர்ச்சியின்மையால் பிரசவத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். எனவே சிறுமி திருமணங்களை நடத்தக் கூடாது,' என்றார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன், சிறப்பு எஸ்.ஐக்கள் மகேஸ்வரி, ஜெயந்தி, சமூக நலத் துறை அலுவலர்கள் பெளசியா பேகம், லதா, ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?
-
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி