தற்காப்பு கலை பயிற்சி முகாம்

மூணாறு: மூணாறு அருகே அடிமாலியில் ' ஜெட் குன் டூ' எனும் தற்காப்பு கலையின் பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.

அதில் கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேபாளத்தைச் சேர்ந்த தற்காப்பு கலை வல்லுனர் சிவதாவு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பல்வேறு பயிற்சிகளை அளித்தார். ஜெட் குன் டூ தற்காப்பு கலையில் பிரசித்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன், மூணாறைச் சேர்ந்த சந்திரசேகர், புரூஸ்லீ ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement