கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்

கோவை: இன்றைய தினம் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக, கார்ட்டூன் தொடர்களை மணிக்கணக்கில் பார்க்கின்றனர். அதன் பாதிப்பாக, நாளடைவில் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களாக மாறுவதால், மன தளவிலும், உடலளவிலும் பாதிக்கின்றனர். இவ்விஷயத்தில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கான கார்டூன் சேனல்கள் எண்ணிக்கை, கடந்த, 10 ஆண்டுகளில் அனைத்து மொழிகளிலும் அதிக எண்ணிக்கையில் வந்து விட்டன. அதுவும் இடைவெளியின்றி, பல தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. பல தொடர்களுக்கு குழந்தைகள் அடிமைகளாகி விடும் அளவுக்கு ஆர்வமாக பார்ப்பதை காண முடிகிறது.
தற்போது ஒளிபரப்பப்படும் கார்டூன் தொடர்கள், இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் தயாரானவையும் ஒளிபரப்பப்படுகிறது. சிறு வயதிலேயே காதல், வன்முறை போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன.
ஏ.ஏ.சி.ஏ.பி என்கிற அமெரிக்கா குழந்தைகள் மற்றும் பதின்பருவ வயதினருக்கான உளவியல் அகாடமி மேற்கொண்ட ஆய்வுகளில், அதிகளவில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதாகவும், கார்ட்டூன் கேரக்டர் போல் தங்களை நினைத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
இச்சூழலில், கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அவற்றில் வரும் கேரக்டர்கள் போல், தங்களை மாற்றி நடந்துகொண்ட மூன்று குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் 'கவுன்சிலிங்' கொடுத்துள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
அரசு மருத்துவமனை டி.இ.ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜ் கூறுகையில், ''இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட வயதினர், பாடம் சார்ந்த விஷயங்களை குறைவான நேரம் மட்டும் பார்க்க அனுமதிக்கலாம்.
தொடர்ந்து பார்த்தால், குழந்தைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்தும். கார்ட்டூன் கேரக்டர் போல் நினைத்து செயல்படும் குழந்தைகளுக்கு சமீபத்தில் சிகிச்சை அளித்துள்ளோம். ஆட்டிசம் பாதிப்பு வரும் என்ற அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகள் இல்லை. அதேநேரம், எதிர்மறை தாக்கம் குழந்தைகளிடம் ஏற்பட வாய்ப்புண்டு,'' என்றார்.
@block_P@
குழந்தைகள் நல துறைத்தலைவர் சசிக்குமார் கூறுகையில், ''கார்டூன் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அந்த கேரக்டராகவே மாற நினைப்பதை காண்கிறோம். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பார்ப்பதால் பாதிப்பு இல்லை. சில கார்டூன் தொடர்களில் மேலிருந்து குதிப்பது, பறப்பது போன்று காண்பிக்கப்படுகிறது. அதை பார்க்கும் பிள்ளைகள், அவ்வாறு செயல்பட முயற்சிக்கின்றனர். மனதளவிலும் சிந்தனைத்திறன் பாதிக்கப்படுகிறது.
அதை நிஜ உலகமாகவே பலர் நினைத்துக் கொள்கின்றனர். கார்டூன் தொடர் அதிக நேரம் பார்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது. பல வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். தாத்தா, பாட்டிகளிடம் குழந்தைகளை விடும்போது, அவர்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு இடத்தில் அமர்ந்தால்போதும் என, கார்டூன் போட்டு விடுகின்றனர். இது முற்றிலும் தவறு, தாத்தா, பாட்டிகளை குறை சொல்ல இயலாது; பெற்றோர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்,'' என்றார்.block_P



மேலும்
-
ஹேர் க்ளிப், பாக்கெட் கத்தியை பயன்படுத்தி பிரசவம்: ரயில் நிலையத்தில் உதவிய ராணுவ மருத்துவர்!
-
முதல்வர் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் திட்டம்; பா.ஜ., முன்னாள் முதல்வர் சொல்வது இதுதான்
-
2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க 443 பேர்; போலி ரசீதால் அம்பலமான மோசடி
-
திருமா இன்றைய கேள்வி: வழக்கம்போல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு குறி!
-
22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு
-
சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் ராமேஸ்வரத்தில் வழிபாடு!