மொகரம் பண்டிகை கொடியேற்றம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள ரசூல் சாகிப் தர்காவில் மொகரம் பண்டிகை கொடியேற்று விழா நடைபெற்றது.

இங்கு நூற்றாண்டு பழமையான ரசூல் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பத்தாம் நாளில் கொடியேற்றி தொழுகை நடத்துவது வழக்கம்.

நேற்று இத் தர்காவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் இமாம்கள் இஸ்மாயில், ரிஸ்வான் கலந்து கொண்டு கூட்டு தொழுகைநடத்தினர்.முன்னதாக ரசூல் சாகிப் மண்ணறையில் பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு முன்னோர்களுக்காக திருக்குரானில் உள்ள ஷரீம் ஓதும் நிகழ்வுநடைபெற்றது. நிகழ்ச்சியில் பரம்பரை முத்தவல்லி மைதீன் ஷா, சையது அப்தாகிர் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் திகழவும், பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யவும், உலக மக்கள் நலன் வேண்டிசிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Advertisement