புண்ணியம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறு

பள்ளிப்பட்டு:புண்ணியம் வழியாக நகரி செல்லும் சாலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து பெங்களூருக்கு விரைவாக சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ற வழித்தடமாக அமைய உள்ளது.

இந்த ஆறுவழி சாலையில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது புண்ணியம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனால், பொதட்டூர்பேட்டையில் இருந்து புண்ணியம் வழியாக ஆந்திர மாநிலம், நகரி செல்லும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க முடியும்.

Advertisement