இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கான வரியை கிடுகிடுவென உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் வரும் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், , 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும், இன்று இரவு அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது, இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை உருவாக்க நினைத்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.










மேலும்
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!
-
அச்சு ஊடகங்களே அதிகப்படியான நம்பகக்தன்மை வாய்ந்தவை; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு!
-
மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டும் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி ஆவேசம்
-
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு; தடையை மீறி போராடுவேன் என்கிறார் சீமான்
-
விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு