மீனவர்களுக்கு மானியத்தில் படகு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி, : புதுச்சேரி மீனவர்கள் 50 சதவீதம் மானியத்தில் பைபர் படகு பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் செய்திக்குறிப்பு:

2025--26ம் நிதியாண்டில் புதுச்சேரி பகுதியை சார்ந்த மீனவர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்குவது. பதிவு செய்யப்பட்ட வெளிப்புற இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் இயந்திரம் மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்டது.

மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள், புதுச்சேரி மீனவர் கூட்டுறவு சம்மேளனத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்களுடன் புதுச்சேரி, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலத்தில் வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement