கள்ளச்சாராயத்திற்கு ரூ.10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.5 லட்சமா?

@block_B@

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் கூறியதாவது:




இறந்த பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அறிவித்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. இதை பார்க்கும்போது இந்த ஆட்சியின் அவலம் தெரிகிறது.


தமிழக அளவில் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற கோர விபத்தில் இறந்தால், அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைப்பதற்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும். சட்டத்தை திருத்தி, உடனடியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு சம்பத் கூறினார்.block_B

Advertisement