துணை முதல்வர் இன்று கரூர் வருகை
கரூர், கரூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, துணை முதல்வர் உதயநிதி இன்று வருகை தருகிறார். இதில் காலை, 10:00 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மதியம், 12:00 மணிக்கு கரூர் பிரேம் மஹாலில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதையடுத்து, 18,331 பயனாளிகளுக்கு, 162.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மாலை, 5:30 மணியளவில் கரூர் ராயனுாரில் நான்கு சட்டசபை தொகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், 16,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமானத்தை மொய்த்த தேனீக்கள்
-
53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!
-
பேய் விரட்டுவதாக தாக்கியதில் பெண் மரணம்: மந்திரவாதி கைது
-
கடைகளை மறைக்கும் பேனர்களால் அவதி
-
மீஞ்சூரில் நீர்நிலைகள் பராமரிப்பில் அலட்சியம் நிலத்தடி நீர் பாதுகாப்பில் பேரூராட்சி நிர்வாகம் விழிக்குமா?
-
திருவள்ளூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி செயலர்...காலி பணியிடங்கள் :அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சுணக்கம்
Advertisement
Advertisement