அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி

திருப்புவனம் : மடப்புரம் கோவில் காவலாளியின் தம்பி, அரசு வழங்கிய பணி, இலவச பட்டா குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்த பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு, வழங்கப்பட்ட ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, நேற்று ஆய்வு செய்தார்.
அஜித்குமார் தாய் மாலதிக்கு, ஜூலை, 2ல் ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பன், ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.
நேற்று மதுரை ஐகோர்ட்டில் அஜித்குமார் தம்பி நவீன்குமார், ''வீட்டுமனை வீட்டில் இருந்து ஆறு கி.மீ., தள்ளி கருவேல மர காட்டினுள் இருப்பதாகவும், 80 கி.மீ., துாரமுள்ள காரைக்குடியில் பணி வழங்கி இருக்கிறது,'' என, அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நேற்று ஆய்வு செய்தார். தாசில்தார் விஜயகுமார், வருவாய் அதிகாரிகள் உடன் சென்றனர்.
மேலும்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்