வீட்டில் மிளகாய் பொடி துாவி 16 சவரன் நகைகள் திருட்டு
பாபநாசம் : பாபநாசம் அருகே வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள், வீட்டிற்குள் மிளகாய் பொடி துாவி தப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த ஹாஜாமைதீன், 50; சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். இவரது குடும்பத்தினர், அதே ஊரில் பெரிய தெருவில், வீடு கட்டி வருகின்றனர். இதனால், அங்கு தங்கி பணிகளை கவனிக்கின்றனர்.
இருப்பினும், ஹாஜாமைதீன் மகன் மலீக் இப்ராஹிம், 19, இரவில், பழைய வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் இரவு, மலீக் இப்ராஹிம் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் உள்ளே யாரோ இருப்பது போல தெரிந்தது. இதையடுத்து, மலீக் இப்ராஹிம் சத்தம் போட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள், வீட்டின் அறைகள், மாடிப்படி முழுதும் மிளகாய் பொடியை துாவி தப்பினர்.
இது குறித்த புகாரில், பாபநாசம் போலீசார் வீட்டை சோதனையிட்டதில், பீரோவில் இருந்த, 16 சவரன் நகை திருடு போயிருந்தது. நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்