மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, மாட்டை தேடி வனத்திற்குள் சென்ற வனக்குழு தலைவரை, யானை மிதித்து கொன்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குடிசல்பை கிராமத்தை சேர்ந்தவர் ஹேமன்னா, 65. இவர் அப்பகுதி பழங்குடியின வனக்குழு தலைவர். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில், பசு மாடு மட்டும் திரும்பாததால், அதை தேடி வனத்திற்குள் சென்றார்.
மாடு திரும்பிய நிலையில் அவர் வராததால், அவரை தேடி உறவினர்கள் வனத்திற்கு சென்றனர். இரவானதால் அவரை தேட முடியவில்லை. நேற்று காலை, 7:30 மணிக்கு, பனைக்காப்பு காட்டிலுள்ள மேட்டுக்கல் வனத்தில், தலையில், யானை மிதித்து இறந்து கிடந்தார். அந்த இடத்தில் யானையின் காலடி தடங்களும் இருந்தன.அடர்ந்த வனத்திற்குள் ஹேமன்னா இறந்து கிடந்ததால், வாகனம் செல்ல முடியவில்லை. துாளி கட்டி, சடலத்தை, 3 கி.மீ., துாரம் சுமந்து வந்தனர்.
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்