டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 9.04 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
ஹரியானாவின் ஜஜ்ஜாரில் காலை 9:04 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு சில வினாடிகள் நீடித்தது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். ஹரியானாவின் ரோஹ்தக்கை பகுதியில் நிலநடுக்கம் மையமாக கொண்டிருந்தது.
இந்த பகுதி டில்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. டில்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
10 ஜூலை,2025 - 11:57 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement