நான்கு வழி சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை பாலையம்பட்டி சந்திப்பில் 2 லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை பாலையம்பட்டி சந்திப்பில் 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

2 லாரிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement