12 நகரங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 12 இடங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில், 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னை, கடலுார், ஈரோடு, கரூர், காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பாளையங்கோட்டை, புதுச்சேரி, துாத்துக்குடி, வேலுார் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement