சிதம்பரம் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, மருத்துவ அலுவலர் மிதுலைராஜன், சுகாதார ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
சிறப்பு விருந்தினராக, எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று ரத்தம் வழங்கி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். முகாமில், துறைத் தலைவர்கள் அறிவழகன், ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்னுபிரியா, இளைஞர் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளர்சுடர்மதி, திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன், தேசிய மாணவர்ப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்னுபிரியா, நன்றி கூறினார்.
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை