ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இரண்டு ஐ.ஏ.எஸ்., மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி அகாடமியிலும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அகாடமியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அங்கித் குமார், பூஜா ஆகியோரும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான விபு கிருஷ்ணா, வினய் குமார் கட்ஜ், சுருதி யரகட்டி ஆகியோரும் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் புதுச்சேரி அரசில் இணைந்து பணி செய்ய உள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!