மனைவியை தாக்கிய கணவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடி போதையில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தாமணி, 38; இவரது கணவர் ஆறுமுகம், 43; தினமும் குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்தவர் காந்தாமணியிடம் தகராறு செய்து, இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Advertisement