'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவங்கியது.

திருக்கோவிலுாரில் 1, 2, 3 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

தொடர்ந்து, பொதுமக்கள் திரளாக பங்கேற்று, 13 அரசு துறைகளைச் சேர்ந்த, 43 சேவைகள் குறிப்பாக விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை பெற புதிய விண்ணப்பங்களை வழங்குவது உள்ளிட்ட பயன்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முகாமில் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், தனித்துணை ஆட்சியர் சுமதி, நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகராட்சி கமிஷனர் திவ்யா, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement