மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் 72 மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Advertisement