மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
விழுப்புரம்: வானுார் அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அருகே ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செல்வம்,42; இவர், சரியாக பணிக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் செல்வம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி தமிழேந்தி திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வம், அங்கு நிலத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த சிலர் அவரை, மீட்டு வானுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement