செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டி கோரி மனு

கடலுார் : செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் கூடுதலாக இணைக்க வேண்டும் என துணை மேயர் தாமரைச்செல்வன் மனு அளித்தார்.

இதுகுறித்து சென்னையில் தி ருமாவளவன் எம்.பி.,யிடம், துணை மேயர் தாமரைசெல்வன் அளித்த மனு: சென்னையில் இருந்து கடலுார் வழியாக திருச்செந்துார் செல்லும் செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக பயணக்கின்றனர்.

குறிப்பாக, கடலுார் மாவட்டத்தில் இருந்து அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலில் பெரும்பாலும் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளே அதிகம் உள்ளன. எனவே, செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement