முத்து மாரியம்மன் கோவிலில் செடல்  திருவிழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது.

நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று (22ம் தேதி) சாகை வார்த்தல் நடக்கிறது. 24ம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா 25ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து செடல் திருவிழா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement