வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை
அரியாங்குப்பம்: வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 65. இவர் கடந்த 20ம் தேதி, தனது மருமகள் சுதாவுடன், அருகில் உள்ள மார்கெட்டுக்கு பழ வியாபாரம் செய்ய சென்றனர்.
வீட்டில் அவரது மகன் படுத்திருந்தார்.
பின், வீட்டிற்கு வந்தபோது, வீட்டு முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்க்கும் போது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயின் மற்றும் மருமகளின் நகைகள் காணாமல் போயிருந்தது. புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
-
ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை
-
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி
Advertisement
Advertisement