அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்
புதுச்சேரி : அஞ்சல்துறையை மேற்படுத்தும் பணி நடக்கவுள்ளதால் வரும் 4ம் தேதி அனைத்து சேவை பணிகள் நடக்காது என, அஞ்சல்துறை அறிவித்தது.
புதுச்சேரி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு:
அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0 வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வரும் 4ம் தேதி சேவை இல்லாத நாளாக அறிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்த சேவையும் நடக்காது. புதிய தொழில் நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்ய இந்த இடை நிறுத்தம் செய்யப்படுகிறது. அனைவருக்கும் துரித டிஜிட்டல் சேவை பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் சேவை இல்லா நாளை கருதி, தங்கள் அஞ்சல் சேவைகளை முன் கூட்டியே பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
-
ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை
-
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி