அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்
கரூர்; கரூரில், அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் அறக்கட்டளை சார்பில், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி., என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். இவர், 2016 - 2021 முதல் கரூரில், கோவை சாலை, ஜவஹர் பஜார் உட்பட பல இடங்களில், 'கானகத்திற்குள் கரூர்' என்ற பெயரில், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
ஓரளவு வளர்ந்துள்ள மரங்களுக்கு, அறக்கட்டளை சார்பில், டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. டிராக்டருக்கு, உரிய ஆவணங்கள் இல்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, மரங்களுக்கு நேற்று டிராக்டர் மூலம், ஆண்டாங்கோவில் புதுாரை சேர்ந்த பெருமாள், 54, என்பவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் டவுன் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
-
பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!