நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்

6

சென்னை; நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2021ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 29) தீர்ப்பு வெளியானது. அதை நினைவூட்டும் வகையில் ராஜ்யசபா திமுக எம்பி வில்சன் ஒரு எக்ஸ் வலைதள பதிவை வெளியிட்டுள்ளார்.


அதை மேற்கோள் காட்டி,முதல்வர் ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளதாவது;


20,088 இடங்கள், பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு. சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது. இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்.


சமூக நீதிக்கான இந்த அரசியலையும். போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

Advertisement