பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்
நீலாங்கரை,கட்டுமான பணித்தளத்தில் துாங்கி கொண்டிருந்தவர்களின், 8 மொபைல் போன்களை திருடிய நபரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
இ.சி.ஆர்., அக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், 28ம் தேதி இரவு, பணித்தளத்திலேயே துாங்கியுள்ளனர்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, 8 பேரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, பாரதிதாசன், 28, உள்ளிட்டோர், நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த செங்கோட்டையன், 29, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், 8 மொபைல் போன்கள் மற்றும் ஒரு பைக்கை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்
-
கேமிங் விளையாட்டில் ரூ.10 லட்சம் பரிசு வென்றவருக்கு கேமிங் அதிகாரி பதவி: ஐக்கூ சீன நிறுவனம் கவுரவிப்பு
-
ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்
-
ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்
-
லாக் அப் மரணங்களை மூடி மறைக்கும் முயற்சி: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து
Advertisement
Advertisement