100% சிறப்பாக செயல்படும் 'நிசார்' செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

2

திருவனந்தபுரம்: இன்றைய நிலவரப்படி, 100 சதவீதம் நிசார் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.


இது தொடர்பாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் நாராயணன் கூறியதாவது: சாத்தியமான மீன்பிடி மண்டலத்தைக் கண்டறிய முடிகிறது. மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று எதுவும் இல்லாமல் திரும்பி வந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது, எங்கள் செயற்கைக்கோள் மூலம், சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் எங்கே உள்ளன என்பதை நாங்கள் கண்காணிக்கிறோம்.


ஒவ்வொரு நாளும், இந்த நாட்டின் 9 லட்சம் மீனவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்து வருகிறோம். அந்த இடத்திற்கு (மீன்பிடி மண்டலம்) செல்ல அவர்கள் அதிக எரிபொருளைச் செலவிடத் தேவையில்லை. அவர்கள் அங்கு சென்று, மீன் பிடித்து திரும்பி வருகிறார்கள். இதன் மூலம், ஆண்டுக்கு, சுமார் ரூ.30,000 கோடி லாபம் ஈட்டுவதாக மதிப்பிட்டனர்.


மற்றொரு விஷயம் என்னவென்றால், மக்கள் கடலில் படகு மூலம் பயணம் செய்தாலும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இப்போது, எங்கள் செயற்கைக்கோள்கள் மூலம், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதற்கான நிகழ்நேர இருப்பிடத்தைப் பெறுகிறார்கள். இது அவர்கள் தேசிய நீர்நிலைகளில் இருப்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.


மேலும் அவர்கள் எல்லைகளைக் கடக்கக்கூடாது. தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு இதை வழங்கி உள்ளோம். நாங்கள் PSLV-C61 திட்டத்தில் தோல்வியை சந்தித்தோம். இது தொடர்பாக தேசிய அளவிலான விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு முழுத் தரவையும் ஆய்வு செய்துள்ளது. இப்போது நாங்கள் அறிக்கைகளை தயார் செய்து வருகிறோம். இறுதி அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு நாராயணன் கூறினார்.



@block_P@

100 சதவீதம்!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ஜி.எஸ்.எல்.வி., எப் - 16 ராக்கெட் வாயிலாக, இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய, 'நிசார்' செயற்கைக்கோள் கடந்த மாதம், 30-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது தொடர்பாக நாராயணன் கூறியதாவது:


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை பயன்படுத்தி, இந்தியர்களால் வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவ முடியும் என்பதை, 'நிசார்' செயற்கைக்கோள் நிரூபித்துள்ளது. சுற்றுப்பாதையில் துல்லியமாக ஏவப்பட்டது, இன்றைய நிலவரப்படி, செயற்கைக்கோள் 100% சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.block_P

Advertisement